புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பிற்கு டிடிவி தினகரன் மறுப்பு

புதிய கட்சி தொடங்க இருப்பதாக வெளியான தகவலை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் மறுத்துள்ளார்.


கோவை, ஜனவரி 17

புதிய கட்சி தொடங்க இருப்பதாக வெளியான தகவலை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் மறுத்துள்ளார்.

கோத்தகிரி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கச் சாலை மார்க்கமாக வந்த அம்மா அ.தி.மு.க. அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அன்னூரில் பட்டாசு வெடித்து மேள தாளம் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.



இதனையடுத்து, மத்திய அரசு ஹஜ் புனித பயணம் செல்பவர்களுக்கு வழங்கி வந்த மானியத்தை ரத்து செய்தது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் டிடிவி தினகரன் பேசுகையில், ஏழை, எளிய சிறுபான்மையின மக்கள் ஹஜ் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மானியம் அரசாலும் வழங்கப்பட்டது. மத்திய அரசு, சிறுபான்மை இன மக்களின், மிகப்பெரிய விருப்பமான ஹஜ் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைத் தடை செய்யாமல் திரும்ப மானியத்தை வழங்க வேண்டும். என்றார். 

நாளை புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், புதிய கட்சி தொடங்குவதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. தொலைக்காட்சிகளில்தான் விவாதம் நடைபெற்றன. கட்சியை ஆளும் துரோகிகளின் கையில் தேர்தல் ஆணையம் கொடுத்துவிட்டது. 90 சதவிகித தொண்டர்கள் தமிழக மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால்தான் ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றேன். உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் கட்சியை எப்படி கொண்டு போக வேண்டும் என்பதற்காக மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து விட்டு, அடுத்தகட்ட நகர்வு குறித்து அறிவிக்க உள்ளேன். அதைச்செய்வோம், இதைச்செய்வோம் எனச் சொல்லவில்லை. ஒரு வாரம் பொறுத்திருங்கள் அறிவிப்பு வரும். 

ரஜினி, கமல் அரசியல் பயணம் குறித்து மக்கள்தான் முடிவு எடுப்பார்கள். தேர்தல் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம். அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை இந்த ஆட்சி கிடப்பில் போட்டுள்ளது. மீண்டும் மக்களின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும்போது இந்தத் திட்டம் கட்டாயம் நிறைவேற்றப்படும். இவ்வாறு கூறினார். 

மேலும், டிடிவி பாஸ்கரன் அதிமுக தொண்டர்களை இணைப்பது குறித்து கேட்டதற்கு தனக்கு தெரியாது என டிடிவி தினகரன் பதிலளித்தார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...