ஒப்பந்தப்புள்ளி காரணமாக மூடப்பட்ட உதகை படகு இல்ல சாகச சைக்கிள் விளையாட்டு : சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

உதகை படகு இல்லத்தில் செயல்பட்டு வந்த சாகச சைக்கிள் விளையாட்டு ஒப்பந்தப்புள்ளி பிரச்சனை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


நீலகிரி, ஜனவரி 16

உதகை படகு இல்லத்தில் செயல்பட்டு வந்த சாகச சைக்கிள் விளையாட்டு ஒப்பந்தப்புள்ளி பிரச்சனை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. குறிப்பாக, உதகை அரசு தாவரவியல் பூங்கா, உதகை படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், தேயிலை பூங்கா போன்ற சுற்றுலா தளங்கள், இங்கு ஆண்டுதோறும் வரும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மனதை விட்டு நீங்காத வண்ணம் புகழ் பெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு கீழ் இயங்கும் உதகை படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வத்துடன் வருகின்றனர். உதகை படகு இல்லத்தில் படகு சவாரி மட்டும் அல்லாத பல்வேறு விளையாட்டுகள் உதகை படகு இல்லத்தில் இயங்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக உதகை படகு இல்லக் கரையில் அமைந்துள்ள பைன் மர சோலையில் சுற்றுலாத்துறை சார்பில் 3 வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு தனியாருக்கு இந்த பைன் மர சோலை கொடுக்கப்பட்டது.



இதில், தனியார் நிறுவனம் படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சைக்கிள் சாகச விளையாட்டுகள் நடத்தப்பட்டு வந்தது, இந்த சைக்கிள் சாகச விளையாட்டுகளில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது உள்ள ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்புள்ளி முடிவடைந்துள்ளதால் சைக்கிள் சாகச விளையாட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் மரங்களினால் ஆன சைக்கிள் சாகச ஓடுதளங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தற்போது, சுற்றுலாத்துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், நிர்ணயித்த தொகையினை விட ஒப்பந்ததாரர்கள் குறைவாகக் கேட்டு வருவதால் ஒப்பந்தப்புள்ளி கோருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ள சைக்கிள் சாகச விளையாட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

Newsletter

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...