நீலகிரி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியரான ஜான் சலிவனின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நீலகிரி, ஜனவரி 16
நீலகிரி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியரான ஜான் சலிவனின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக பதவி வகித்து மாவட்ட வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட ஜான் சலிவன் சிலை கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப்பட்டது. தற்போது, உதகையில் செயல்படும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 1818 - 1819ம் ஆண்டுகளில் கோத்தகிரி கண்ணேரிமுக்கு கிராமத்தில் செயல்பட்டது. மாவட்டத்தின் முதல் ஆட்சியராக ஜான் சலிவன் பணியாற்றினார். அவரது காலத்தில், மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், ஜான் சலிவனின் 163-வது நினைவு நாளையொட்டி, கண்ணேரிமுக்கு நினைவகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நீலகிரி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியரான ஜான் சலிவனின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக பதவி வகித்து மாவட்ட வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட ஜான் சலிவன் சிலை கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப்பட்டது. தற்போது, உதகையில் செயல்படும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 1818 - 1819ம் ஆண்டுகளில் கோத்தகிரி கண்ணேரிமுக்கு கிராமத்தில் செயல்பட்டது. மாவட்டத்தின் முதல் ஆட்சியராக ஜான் சலிவன் பணியாற்றினார். அவரது காலத்தில், மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், ஜான் சலிவனின் 163-வது நினைவு நாளையொட்டி, கண்ணேரிமுக்கு நினைவகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.