எம்.ஜி.ஆர். பிறந்த நாளான நாளை தனிக்கட்சி தொடங்குவது பற்றிய முடிவை அறிவிப்பேன் என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 16
எம்.ஜி.ஆர். பிறந்த நாளான நாளை தனிக்கட்சி தொடங்குவது பற்றிய முடிவை அறிவிப்பேன் என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நான் தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக நாளை முடிவு செய்யப்படும். நாளை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் ஆகும். எனவே, எம்.ஜி.ஆர். பிறந்த நாளான நாளை தனிக்கட்சி தொடங்குவது பற்றி முடிவு செய்வேன். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.