நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டார்.
நீலகிரி, ஜனவரி 16
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டார்.

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. முன்னதாக, யானை முகாம் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பூஜையை ஒட்டி வளர்ப்பு யானைகள் கோவில் முன்பு அணிவகுத்து நின்றன. அதனைத் தொடர்ந்து யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுகளோடு கூடுதலாக பொங்கல், ஆப்பிள், மாதுளை, தர்பூசணி, வாழைப்பழம், செங்கரும்பு போன்றவை வழங்கப்பட்டன. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா கலந்து கொண்டு வளர்ப்பு யானைகளுக்கு உணவுகளை வழங்கினார். அதேபோல இந்த நிகழ்வைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டார்.

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. முன்னதாக, யானை முகாம் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பூஜையை ஒட்டி வளர்ப்பு யானைகள் கோவில் முன்பு அணிவகுத்து நின்றன. அதனைத் தொடர்ந்து யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுகளோடு கூடுதலாக பொங்கல், ஆப்பிள், மாதுளை, தர்பூசணி, வாழைப்பழம், செங்கரும்பு போன்றவை வழங்கப்பட்டன. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா கலந்து கொண்டு வளர்ப்பு யானைகளுக்கு உணவுகளை வழங்கினார். அதேபோல இந்த நிகழ்வைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர்.