நடிகர் சத்யராஜூக்கு கவுசல்யா சங்கர் விருது

தமிழ் சினிமா உலகின் திறமைசாலிகளைக் கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2017-க்கான விருது விழா சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்றது.

ஜனவரி 15

தமிழ் சினிமா உலகின் திறமைசாலிகளைக் கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2017-க்கான விருது விழா சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், எஸ்.எஸ்.வாசன் விருது இசைஞானி இளையராஜாவுக்கும், சிறந்த படத்திற்கான விருது அறத்திற்கும் என நகைச்சுவை, சிறந்த நடிப்பு, இயக்கம் என திரையுலகில் பல்வேறு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பாகுபலி படத்தில் சிறந்த துணை நடிகருக்கான விருது நடிகர் சத்யராஜூக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே இந்த விழாவின் போது, உடுமலையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கர் நினைவாக நடிகர் சத்யராஜூக்கு கவுசல்யா- சங்கர் விருதும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சத்யராஜூக்கு விருது வழங்கிய கவுசல்யா கூறுகையில், நடிகராக மட்டும் இல்லாமல் சாதிய அடக்குமுறைகளுக்கும் எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர் சத்யராஜ். தற்போதைய பெரும்பாலான நடிகர்கள் தனது தொழிலை மட்டும் பார்த்து வரும் நிலையில் சமுதாயத்தில் நிகழும் இன்னல்களைக் கண்டு, மக்களோடு மக்களாக நிற்கும் மனிதர்களில் ஒருவர் சத்யராஜ் என்றார்.

சத்யராஜ் இதுகுறித்து கூறுகையில், விழா ஒருங்கிணைப்பாளர்கள் இந்த விருது குறித்து முன்பே என்னிடம் தெரிவித்திருந்தனர். ஆனால், அப்போது வேறு ஏதேனும் மூத்த நடிகர்களின் கையால் இதனை பெறுவேன் என நான் நினைத்திருந்தேன். ஆனால், தற்போது கவுசல்யாவின் கையால் இந்த விருதினை பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இச்சமூகத்தில் தனக்கு ஏற்பட்ட சாதிய அடக்குமுறைக்கு அடிபணிந்து இருக்காமல் அதனைத் தொடர்ந்து எதிர்த்து வரும் கவுசல்யா பாராட்டுக்குரியவர். இங்குச் சாதிய அடிப்படை கட்டமைப்புகளை மாற்றினால் மட்டுமே தெளிவான சமூகம் பிறக்கும். அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் கவுசல்யா போன்ற ஒவ்வொருவரும் போராளிகளே என்றார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...