நீலகிரி மாவட்டத்தில் வரும் ஜனவரி 16 (நாளை) மற்றும் 17 ஆகிய இருதினங்கள் சுற்றுலா பொங்கல் உதகை படகு இல்லத்தில் நடைபெற உள்ளது.
நீலகிரி, ஜனவரி 15
நீலகிரி மாவட்டத்தில் வரும் ஜனவரி 16 (நாளை) மற்றும் 17 ஆகிய இருதினங்கள் சுற்றுலா பொங்கல் உதகை படகு இல்லத்தில் நடைபெற உள்ளது.
தமிழர் திரு நாளான பொங்கல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆண்டு தோறும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பொங்கல் நடைபெறுவது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உதகை படகு இல்லத்தில் ஜன. 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தப்பாட்டம், கரகம், காவடி கிராமிய நிகழ்ச்சிகளும் பழங்குடியினர், படுகர் நடனம் மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வரும் ஜனவரி 16 (நாளை) மற்றும் 17 ஆகிய இருதினங்கள் சுற்றுலா பொங்கல் உதகை படகு இல்லத்தில் நடைபெற உள்ளது.
தமிழர் திரு நாளான பொங்கல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆண்டு தோறும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பொங்கல் நடைபெறுவது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உதகை படகு இல்லத்தில் ஜன. 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தப்பாட்டம், கரகம், காவடி கிராமிய நிகழ்ச்சிகளும் பழங்குடியினர், படுகர் நடனம் மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.