வறட்சியிலும் சிறு மலர்ச்சியில் பொங்கல் கொண்டாடிய விவசாயிகள்


கோவை ஜனவரி 14

கடந்த ஆண்டு 130 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை, மக்காச்சோளம், காய்கறிகள், மாட்டு தீவனங்கள் போன்றவை அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றன்.

இந்த ஆண்டு வறட்சியிலும் சிறு மலர்ச்சி போல் இரண்டு மாதங்கள் பெய்த மழையினால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட  விவசாயிகள் சற்று மிகிழ்ச்சியாகவே பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள்.

"பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு சற்று ஆறுதலாகதான் அமைந்தது. இந்த திருநாளில் இயற்கை அன்னை என்றும் மழை பொழிய விவசாயிகளுக்கு ஆதரவாக என்றும் இருக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்",என கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி தெரிவித்தார்.

சென்ற ஆண்டு கரும்பு ஒரு ஜோடி சுமார் ரூபாய் 80 விற்ற நிலையில் இந்த ஆண்டு சுமார் ரூபாய் 100 வரை விற்கப்படுகிறது மேலும் கரும்பு வரத்தும் அதிகமாக காணப்பட்டதால் கரும்பு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...