களைகட்டிய பொங்கல் விற்பனை : கரும்பு விலை சரிவு, ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள்

கோவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும், கரும்பு விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

கோவை, ஜனவரி 13

கோவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும், கரும்பு விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கரும்புகள் கோவையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, மஞ்சள், பானை உள்ளிட்ட பொருட்களை ஆர்வத்துடன் வாங்கப் பூ மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. 

பண்டிகையின் முக்கிய அம்சமான கரும்பு, ஒரு ஜோடி ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விளைச்சல் குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஒரு ஜோடி கரும்பு ரூ. 150 முதல் ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு விலை குறைந்து இருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆர்வத்துடன் கரும்பை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். 

இதனிடையே, கரும்பு விற்பனை இந்தாண்டு விவசாயிகளுக்கும், ஆறுதல் அளிப்பதாகவும், விலை குறைவு காரணமாக விற்பனை அமோகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...