கோவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும், கரும்பு விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
கோவை, ஜனவரி 13
கோவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும், கரும்பு விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கரும்புகள் கோவையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, மஞ்சள், பானை உள்ளிட்ட பொருட்களை ஆர்வத்துடன் வாங்கப் பூ மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
பண்டிகையின் முக்கிய அம்சமான கரும்பு, ஒரு ஜோடி ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விளைச்சல் குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஒரு ஜோடி கரும்பு ரூ. 150 முதல் ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு விலை குறைந்து இருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆர்வத்துடன் கரும்பை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
இதனிடையே, கரும்பு விற்பனை இந்தாண்டு விவசாயிகளுக்கும், ஆறுதல் அளிப்பதாகவும், விலை குறைவு காரணமாக விற்பனை அமோகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும், கரும்பு விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கரும்புகள் கோவையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, மஞ்சள், பானை உள்ளிட்ட பொருட்களை ஆர்வத்துடன் வாங்கப் பூ மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
பண்டிகையின் முக்கிய அம்சமான கரும்பு, ஒரு ஜோடி ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விளைச்சல் குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஒரு ஜோடி கரும்பு ரூ. 150 முதல் ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு விலை குறைந்து இருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆர்வத்துடன் கரும்பை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
இதனிடையே, கரும்பு விற்பனை இந்தாண்டு விவசாயிகளுக்கும், ஆறுதல் அளிப்பதாகவும், விலை குறைவு காரணமாக விற்பனை அமோகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.