அதிநவீன ஜிபிஎஸ் கருவியுடன் புதிய ரோந்து வாகனங்கள் அறிமுகம்

நீலகிரியில் அதிநவீன ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நீலகிரி, ஜனவரி 13

நீலகிரியில் அதிநவீன ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார். 



உதகையில் அதிநவீன ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய புதிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 16 வாகனங்கள் இயக்கப்பட உள்ளது. இவ்வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவிகள் கண்காணிப்பு அறையில் உள்ள கணினிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால், வாகனங்கள் எங்கு உள்ளது என்பதை துல்லியமாக கண்காணிக்க முடியும். 

மேலும் இவ்வாகனத்தில் உள்ள காவலர்களிடம் செல்போன்கள் 100 சேவையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால், விபத்து மற்றும் அவசர காலங்களில் இவர்களிடம் உடனடியாக தொடர்பு கொள்ள முடியும். இந்த நிலையில், முதற்கட்டமாக, பயன்பாட்டிற்காக 6 வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், உதகை நகர காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பல காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...