நீலகிரியில் அதிநவீன ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நீலகிரி, ஜனவரி 13
நீலகிரியில் அதிநவீன ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உதகையில் அதிநவீன ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய புதிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 16 வாகனங்கள் இயக்கப்பட உள்ளது. இவ்வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவிகள் கண்காணிப்பு அறையில் உள்ள கணினிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால், வாகனங்கள் எங்கு உள்ளது என்பதை துல்லியமாக கண்காணிக்க முடியும்.
மேலும் இவ்வாகனத்தில் உள்ள காவலர்களிடம் செல்போன்கள் 100 சேவையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால், விபத்து மற்றும் அவசர காலங்களில் இவர்களிடம் உடனடியாக தொடர்பு கொள்ள முடியும். இந்த நிலையில், முதற்கட்டமாக, பயன்பாட்டிற்காக 6 வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், உதகை நகர காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பல காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நீலகிரியில் அதிநவீன ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உதகையில் அதிநவீன ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய புதிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 16 வாகனங்கள் இயக்கப்பட உள்ளது. இவ்வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவிகள் கண்காணிப்பு அறையில் உள்ள கணினிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால், வாகனங்கள் எங்கு உள்ளது என்பதை துல்லியமாக கண்காணிக்க முடியும்.
மேலும் இவ்வாகனத்தில் உள்ள காவலர்களிடம் செல்போன்கள் 100 சேவையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால், விபத்து மற்றும் அவசர காலங்களில் இவர்களிடம் உடனடியாக தொடர்பு கொள்ள முடியும். இந்த நிலையில், முதற்கட்டமாக, பயன்பாட்டிற்காக 6 வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், உதகை நகர காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பல காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.