சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை: ப. சிதம்பரம் ஆவேசம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் கீழ் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 13

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் கீழ் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் கீழ் விசாரிக்க முடியாது. சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. சோதனை நடைபெறும் என நேற்றே எதிர்பார்த்தேன். இந்த வழக்கில் இதுவரை ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. 

தில்லியில் உள்ள எனது வீட்டில் தேவையில்லாமல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அங்கு கார்த்தி வசிக்கவில்லை. சென்னை, தில்லி வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. படுக்கையறை, சமையலறையில் சோதனை நடத்தினர். இதுவரை 3 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட நாடகம். நாடாளுமன்றத்தில் நான் அளித்த விளக்கம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...