சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றம்

ஜனவரி 12

ஆளுநர் உரையுடன் கடந்த திங்களன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளே ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற டி.டி.வி தினகரன் முதன்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான அறிக்கை, தமிழ்நாடு என பெயர்மாற்றம் செய்யப்பட்டதன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் ஆகிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். மேலும், துணை நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர் செல்வம் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார். இதில், போக்குவரத்துத்துறை, குடிசை மாற்று வாரியம் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதியத்தை 100 சதவிகிதம் உயர்த்தும் மசோதா, மேயர் மற்றும் நகரசபை தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்ய வழி செய்யும் மசோதா, உள்ளாட்சி அதிகாரிகளுக்கு சிறப்பு பதவி நீட்டிப்பு மசோதா ஆகியவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. எம்.எல்.ஏ.க்கள் ஊதிய உயர்வை ஏற்க மாட்டோம் என்று கூறி தி.மு.க, காங்கிரஸ் உறுப்பினர்கள் மசோதாவை எதிர்த்து வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, மீண்டும் தேதி குறிப்பிடாமல் இந்தக் கூட்டத்தொடரை சபாநாயகர் முடித்துவைத்து அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...