ரயில்களில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கோவை, ஜனவரி 12
ரயில்களில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள நேரு கல்லூரியில் ஏர் ரைபிள் அகாடமியை, தமிழக ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், "ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் அதிக தங்கங்கள் கிடைத்து வருகிறது. இதுபோன்ற அகாடமிகள் சிறந்த வீரர்களை உருவாக்கும்.
ரயில்வேயில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவது குறைந்துள்ளது. ரயில்வே போலீசாரின் சோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு அதிகளவில் கண்காணிப்பு கேமராக்கள் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே குற்றங்களில் தொடர்புடைய வட மாநில குற்றவாளிகள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயில் பயணத்தில் அண்டை மாநிலங்களில் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றாலும், தமிழகத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்புப் பாதை காவல்துறையில் போதுமான காவலர்கள் உள்ளனர். புலன் விசாரணைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
ரயில்களில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள நேரு கல்லூரியில் ஏர் ரைபிள் அகாடமியை, தமிழக ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், "ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் அதிக தங்கங்கள் கிடைத்து வருகிறது. இதுபோன்ற அகாடமிகள் சிறந்த வீரர்களை உருவாக்கும்.
ரயில்வேயில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவது குறைந்துள்ளது. ரயில்வே போலீசாரின் சோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு அதிகளவில் கண்காணிப்பு கேமராக்கள் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே குற்றங்களில் தொடர்புடைய வட மாநில குற்றவாளிகள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயில் பயணத்தில் அண்டை மாநிலங்களில் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றாலும், தமிழகத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்புப் பாதை காவல்துறையில் போதுமான காவலர்கள் உள்ளனர். புலன் விசாரணைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.