டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்


கோவை, ஜனவரி 12

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றிய ஊர்காவலர் படை வீரர்கள் (கோவை மாநகரம்) மற்றும் இன்னர் வீல் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பினருக்கு, கோவை மாநகராட்சி ஆணையர் மரு. க. விஜயகார்த்திகேயன் இன்று பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.



கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வரும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், கோவை மாநகராட்சியோடு இணைந்து 400 ஊர்காவலர் படை வீரர்கள் மற்றும் இன்னர் வீல் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பைச் சேர்ந்த 70 தன்னார்வலர்கள் டெங்கு நோய் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து டெங்கு நோய் பற்றிய தகவல்களை எடுத்துக் கூறி நோய் தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இதில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டன.



கோவை மாநகர ஊர்காவலர் படை சார்பாக தனசேகர், மாநகர ஊர்க்காவல்படையின் பிராந்திய தளபதி மற்றும் தேன்மொழி ராஜாராம், மாநகர ஊர்க்காவல்படையின் பிராந்திய துணைத் தலைவர் ஆகியோர் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.



மேலும், இன்னர் வீல் ஆஃப் கோயம்பத்தூர் அமைப்பின் தலைவர் சாந்தி ராஜசேகர், செயலாளர் பி. கஸ்தூரி வசந்தி, அமைப்பின் மேற்கு மண்டல தலைவர் அனு மெண்டா, செயலாளர் மனிஷா பாஜ்பாய், கிழக்கு மண்டலத்தின் தலைவர் மனிமேகலா. வி. ராஜ் மற்றும் செயலாளர் சாவித்ரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.



Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...