கோவை, ஜனவரி 12
டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றிய ஊர்காவலர் படை வீரர்கள் (கோவை மாநகரம்) மற்றும் இன்னர் வீல் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பினருக்கு, கோவை மாநகராட்சி ஆணையர் மரு. க. விஜயகார்த்திகேயன் இன்று பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வரும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், கோவை மாநகராட்சியோடு இணைந்து 400 ஊர்காவலர் படை வீரர்கள் மற்றும் இன்னர் வீல் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பைச் சேர்ந்த 70 தன்னார்வலர்கள் டெங்கு நோய் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து டெங்கு நோய் பற்றிய தகவல்களை எடுத்துக் கூறி நோய் தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இதில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டன.

கோவை மாநகர ஊர்காவலர் படை சார்பாக தனசேகர், மாநகர ஊர்க்காவல்படையின் பிராந்திய தளபதி மற்றும் தேன்மொழி ராஜாராம், மாநகர ஊர்க்காவல்படையின் பிராந்திய துணைத் தலைவர் ஆகியோர் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.

மேலும், இன்னர் வீல் ஆஃப் கோயம்பத்தூர் அமைப்பின் தலைவர் சாந்தி ராஜசேகர், செயலாளர் பி. கஸ்தூரி வசந்தி, அமைப்பின் மேற்கு மண்டல தலைவர் அனு மெண்டா, செயலாளர் மனிஷா பாஜ்பாய், கிழக்கு மண்டலத்தின் தலைவர் மனிமேகலா. வி. ராஜ் மற்றும் செயலாளர் சாவித்ரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
