நாட்டின் 100-வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ

இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 12

இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ செயற்கைகோள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சொந்தமான 30 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதில் 710 கிலோ எடைகொண்ட கார்ட்டோ சாட் -2 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. 

இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து காலை 9.28 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தியது. இது இஸ்ரோ அனுப்பும் 100-வது செயற்கைகோளாகும். தகவல் தொடர்பு, போக்குவரத்து போன்றவற்றை மேலும் மேம்படுத்தும் வகையில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியை துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது இந்த கர்ட்டோ சாட் -2 செயற்கைகோள் ஆகும். வெளிநாட்டைச்சேர்ந்த 28 செயற்கைகோள்கள் உட்பட மொத்தம் 31 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. 28 செயற்கைகோள்கள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பின்லாந்து, கொரியா, பிரான்சு ஆகிய நாடுகளை சேர்ந்தவை ஆகும். 

2.21 மணி நேரத்தில் 505 கி.மீ. உயரத்தில் புவி வட்ட பாதையில் கார்ட்டோ சாட் -2 செயற்கைகோள் நிலைநிறுத்தப்படும். கார்ட்டோ சாட் -2 செயற்கை கோளின் எடை 710 கிலோ ஆகும். இந்த செயற்கைகோள் இயற்கை வள ஆராய்ச்சிக்கு உதவும். மொத்தம் 1,323 கிலோ எடையுள்ள 31 செயற்கைகோள்களுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முந்திய கிரண்குமாரின் தலைமையில் ஏவப்பட்ட கடைசி ராக்கெட் இதுவாகும். 

நாட்டின் 100-வது செயற்கைகோளை வெற்றிகரமாக அனுப்பிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

இந்தியா சாதனை - பாகிஸ்தான் கவலை :

இந்தியாவின் இந்த சாதனை குறித்து பாகிஸ்தான் தனது கவலையை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-

பூமியின் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உள்ளடக்கிய அனைத்து விண்வெளித் தொழில்நுட்பங்களும், இயல்பான இரட்டை பயன்பாடானது பொதுமக்கள் மற்றும் ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் எனவே, இத்தகைய துரதிர்ஷ்டங்கள், இராணுவத் தளர்ச்சியின் உறுதியற்ற தன்மையை கட்டமைப்பதை நோக்கி செலுத்தப்பட வேண்டியது இன்றியமையாததாகும். இத்தகைய முயற்சிகள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இராணுவத் திறன்களை வளர்த்தல் என்பது பிராந்திய மூலோபாய ஸ்திரத்தன்மையை பாதிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...