ஜெ., சிகிச்சை குறித்த ஆவணங்களை சமர்ப்பித்தது அப்பல்லோ

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்தது.

ஜனவரி 12

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்தது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கலச மஹால் கட்டிடத்தில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதில், டிடிவி தினகரன், மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்த ஆதாரங்களையும், ஆவணங்களையும் சேகரித்து வருகிறது.

இதனிடையே, விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதற்கு, அப்பல்லோ நிர்வாகம் சார்பில் 2 வாரகால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற விசாரணை ஆணையம் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை அளிக்க அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஜனவரி 12 வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்தது. நீதிபதி ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் 2 பெரிய பெட்டிகளில் கொண்டு வரப்பட்டுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இருதய நிபுணர் சுவாமிநாதன் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...