வால்பாறை அடுத்த சவரங்காடு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கோவை, ஜனவரி 12
வால்பாறை அடுத்த சவரங்காடு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வால்பாறை அடுத்த காமராஜநகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர், தனது கால்நடைகளான பசு மற்றும் காளை மாடுகளை அருகில் உள்ள எஸ்டேட் பகுதியில் உணவிற்காக மேயவிடுவது வழக்கம்.
இவ்வாறு நேற்று எஸ்டேட் பகுதியில் மாடுகள் சென்றிருந்த நிலையில் மாலை காளை மாடு மட்டும் திரும்பி வரவில்லை. இதனைத்தொடர்ந்து, அன்பழகன் அருகில் உள்ள சவரங்காடு எஸ்டேட் பகுதியில் தேடியபோது அங்கு மாடு கழுத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரி சக்திவேல் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டார். அப்போது, சிறுத்தையின் காலடித் தடங்கல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிறுத்தை தாக்கியதாலேயே காளை மாடு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.
இதனிடையே சவரங்காடு எஸ்டேட் பகுதி மக்கள், இந்த சிறுத்தை கடந்த சில நாட்களாக குடியிருப்புகளின் அருகில் சுற்றித் திரிவதாகவும், இதனால் மனித உயிரிழப்புகள் ஏற்படும் முன் அதனைக் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
வால்பாறை அடுத்த சவரங்காடு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வால்பாறை அடுத்த காமராஜநகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர், தனது கால்நடைகளான பசு மற்றும் காளை மாடுகளை அருகில் உள்ள எஸ்டேட் பகுதியில் உணவிற்காக மேயவிடுவது வழக்கம்.
இவ்வாறு நேற்று எஸ்டேட் பகுதியில் மாடுகள் சென்றிருந்த நிலையில் மாலை காளை மாடு மட்டும் திரும்பி வரவில்லை. இதனைத்தொடர்ந்து, அன்பழகன் அருகில் உள்ள சவரங்காடு எஸ்டேட் பகுதியில் தேடியபோது அங்கு மாடு கழுத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரி சக்திவேல் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டார். அப்போது, சிறுத்தையின் காலடித் தடங்கல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிறுத்தை தாக்கியதாலேயே காளை மாடு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.
இதனிடையே சவரங்காடு எஸ்டேட் பகுதி மக்கள், இந்த சிறுத்தை கடந்த சில நாட்களாக குடியிருப்புகளின் அருகில் சுற்றித் திரிவதாகவும், இதனால் மனித உயிரிழப்புகள் ஏற்படும் முன் அதனைக் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.