வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி காளை மாடு பலி

வால்பாறை அடுத்த சவரங்காடு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கோவை, ஜனவரி 12

வால்பாறை அடுத்த சவரங்காடு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வால்பாறை அடுத்த காமராஜநகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர், தனது கால்நடைகளான பசு மற்றும் காளை மாடுகளை அருகில் உள்ள எஸ்டேட் பகுதியில் உணவிற்காக மேயவிடுவது வழக்கம். 

இவ்வாறு நேற்று எஸ்டேட் பகுதியில் மாடுகள் சென்றிருந்த நிலையில் மாலை காளை மாடு மட்டும் திரும்பி வரவில்லை. இதனைத்தொடர்ந்து, அன்பழகன் அருகில் உள்ள சவரங்காடு எஸ்டேட் பகுதியில் தேடியபோது அங்கு மாடு கழுத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பது கண்டறியப்பட்டது.



இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரி சக்திவேல் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டார். அப்போது, சிறுத்தையின் காலடித் தடங்கல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிறுத்தை தாக்கியதாலேயே காளை மாடு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.

இதனிடையே சவரங்காடு எஸ்டேட் பகுதி மக்கள், இந்த சிறுத்தை கடந்த சில நாட்களாக குடியிருப்புகளின் அருகில் சுற்றித் திரிவதாகவும், இதனால் மனித உயிரிழப்புகள் ஏற்படும் முன் அதனைக் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...