திருவள்ளுவர் தினமான 15-ம் தேதியன்று கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி கடைகளை மூடும்படி மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை, ஜனவரி 11
திருவள்ளுவர் தினமான 15-ம் தேதியன்று கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி கடைகளை மூடும்படி மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சியில் வரும் 15-ம் தேதியன்று “திருவள்ளுவர் தினம்” கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கோவை மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர் ஆடு அறுவைமனை, சத்திரோடு மற்றும் போத்தனூர் மாடு அறுவைமனைகள், துடியலூர் ஆடு அறுவைமனை மற்றும் மாநகராட்சியில் கீழ் இயங்கும் 10 மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பாக தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.