தூய்மைப் பணி, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலியுடன் கோவை விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும், 10-வது ஆண்டு கோவை விழா- 2018 கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

கோவை, ஜனவரி 10

கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும், 10-வது ஆண்டு கோவை விழா- 2018 கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 6-வது நாளான நேற்று (ஜன. 9), கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா என்ற தலைப்பில் தூய்மைப்பணி நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் கலந்துக்கொண்டு தூய்மைப் பணியை தொடங்கி வைத்துப் பேசினார்.



அப்போது அவர் பேசுகையில், கோவை நமது ஊர். இதை நாம் தான் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நமது சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால்தான் எந்தவித நோய் பாதிப்பும் இன்றி, ஆரோக்கியமாக வாழ முடியும்.

கோவை விழாவின் ஒருபகுதியாக யங் இந்தியன்ஸ் அமைப்பினர் பேருந்து நிலையங்களைத் தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குறியது. கோவையை தூய்மையாக வைத்துக்கொள்ள இதுபோன்ற அமைப்புகளின் முயற்சிக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் முழு ஒத்துழைப்பை அளிக்கும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தூய்மைப்பணி குறித்து யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் பிரசன்னா, துணைத்தலைவர் விஷ்ணு ஆகியோர் கூறுகையில், கோவை விழாவின் ஒரு பகுதியாக காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி 11ம் தேதியன்று உக்கடம் பேருந்து நிலையத்தில் இப்பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

அதைத்தொடர்ந்து ரயில் நிலைய சாலையில் தூய்மைப்பணி நடைபெற உள்ளது. பேருந்து நிலையங்களில் 50 குப்பைக்கூடைகள் வைக்கப்படும். இங்கு வரும் பொதுமக்கள் குப்பைகளை அந்தக்கூடைகளில் வீசி, பேருந்து நிலையத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கோவையை தூய்மையாக வைத்துக்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.



குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு:-

அதைத்தொடர்ந்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், யங் இந்தியன்ஸ் அமைப்பின் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர போக்குவரத்துத் துணைக் காவல் ஆணையர் சுஜித்குமார் கலந்துகொண்டு, பலூன்கள் பறக்கவிட்டு, மனிதச்சங்கிலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில், யங் இந்தியன்ஸ் அமைப்பின் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் டாக்டர் பிரியதர்ஷினி, துணைத் தலைவர் நிவேதா, யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் பிரச்சன்னா, துணைத் தலைவர் திபேந்தர் சிங் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...