பொங்கல் பண்டிகைக்காக ஊதியமின்றி பேருந்தை இயக்கத் தயார்- போக்குவரத்துத் தொழிலாளர்கள்

தமிழக அரசு தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசினால் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தபடி ஊதியம் இல்லாமல் பொங்கல் பண்டிகைக்காகப் பேருந்துகளை இயக்கத் தயார் என கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை, ஜனவரி 10

தமிழக அரசு தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசினால் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தபடி ஊதியம் இல்லாமல் பொங்கல் பண்டிகைக்காகப் பேருந்துகளை இயக்கத் தயார் என கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று 7-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "தமிழக அரசு உடனடியாக தொழிலாளர்களை அழைத்துப் பேச வேண்டும். தமிழக முதலமைச்சர் இந்த பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும். தொழிலாளர்கள் விரும்பாத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக இன்று தொழிலாளர்கள் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறோம்.

மேலும், தமிழக அரசு சார்பில் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசினால் ஊதியம் இல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தபடியே இரண்டு நாட்கள் பொங்கல் பண்டிகைக்காகப் பேருந்தை இயக்கத் தயார்" என்றனர்.

இதனிடையே, போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...