”கோவை விழா 2018” - ன் ஒரு பகுதியாக தொல்லியல் துறை அருங்காட்சியகத்தை அரசுக் கல்லூரி மாணவர்கள் சுற்றி பார்த்தனர்.
கோவை ஜனவரி 9
”கோவை விழா 2018” - ன் ஒரு பகுதியாக தொல்லியல் துறை அருங்காட்சியகத்தை அரசுக் கல்லூரி மாணவர்கள் சுற்றி பார்த்தனர்.

கோவையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் 'கோவை விழா 2018' ஜனவரி மாதம் 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாணவராயர் பவுண்டெசன் சார்பாக கோவை அரசு கல்லூரி, தமிழ் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கோவை இராமநாதபுரத்தில் உள்ள இந்திய தொல்லியல் அருட்காட்சியகம் சுற்றி காண்பிக்கப்பட்டது.

இது குறித்து வாணவராயர் பவுண்டெசன் பொறுப்பாளர் ஜெகதீசன் கூறுகையில், "மாணவர்களுக்கு பண்டைய காலம், காலச்சாரம், நாகரிகம், பழக்க வழக்கங்கள் போன்றவை தெரியப்படுத்தவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது" என்றார்.
இந்தத் தொல்லியல்துறை அருங்காட்சியத்தில் சுமார் 2,000 ஆண்டு பழமையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கோவை மாவட்டத்தைச் சார்ந்த பொருட்களாகும் என தொல்லியில் துறை அலுவலர் எஸ். நந்தகுமார் தெரிவித்தார்.

அருங்காட்சியகத்தைச் சுற்றி பார்த்த மாணவர்கள் பழங்கால பொருட்கள் குறித்த குறிப்புகளை எடுத்துக்கொண்டனர். மேலும், அவர்கள் கூறுகையில் இந்த ஏற்பாடு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, நிறைய விஷயங்கள் கற்றுகொள்ள முடிந்தது என்றனர்.

”கோவை விழா 2018” - ன் ஒரு பகுதியாக தொல்லியல் துறை அருங்காட்சியகத்தை அரசுக் கல்லூரி மாணவர்கள் சுற்றி பார்த்தனர்.

கோவையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் 'கோவை விழா 2018' ஜனவரி மாதம் 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாணவராயர் பவுண்டெசன் சார்பாக கோவை அரசு கல்லூரி, தமிழ் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கோவை இராமநாதபுரத்தில் உள்ள இந்திய தொல்லியல் அருட்காட்சியகம் சுற்றி காண்பிக்கப்பட்டது.

இது குறித்து வாணவராயர் பவுண்டெசன் பொறுப்பாளர் ஜெகதீசன் கூறுகையில், "மாணவர்களுக்கு பண்டைய காலம், காலச்சாரம், நாகரிகம், பழக்க வழக்கங்கள் போன்றவை தெரியப்படுத்தவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது" என்றார்.
இந்தத் தொல்லியல்துறை அருங்காட்சியத்தில் சுமார் 2,000 ஆண்டு பழமையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கோவை மாவட்டத்தைச் சார்ந்த பொருட்களாகும் என தொல்லியில் துறை அலுவலர் எஸ். நந்தகுமார் தெரிவித்தார்.

அருங்காட்சியகத்தைச் சுற்றி பார்த்த மாணவர்கள் பழங்கால பொருட்கள் குறித்த குறிப்புகளை எடுத்துக்கொண்டனர். மேலும், அவர்கள் கூறுகையில் இந்த ஏற்பாடு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, நிறைய விஷயங்கள் கற்றுகொள்ள முடிந்தது என்றனர்.
