பாசனதிட்டப்பணிகளை இணையதளத்தில் பதிவு செய்யத் தற்காலிக பதிவாளர்களுக்கான பணிநியமன முகமை

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசனதிட்டப் பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்யத் தகுதி வாய்ந்த கணினி புள்ளிவிவரப் பதிவாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், பணிநியமன முகமை மூலம் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 9

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசனதிட்டப் பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்யத் தகுதி வாய்ந்த கணினி புள்ளிவிவரப் பதிவாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், பணிநியமன முகமை மூலம் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய உள்ள பணியாளர்கள், இளங்கலைபட்டப்படிப்பு, கணினி இயக்குத்திறன், தட்டச்சுதிறனில் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு, மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.10,000 வழங்கப்படும்.

இப்பணியை மேற்கொள்ளத் தகுதி வாய்ந்த பதிவுத்துறையின் மூலம் பதிவு செய்து செயல்பட்டு வரும் பணிநியமன முகமைகள் பணியாளர்களை தேர்வு செய்து வழங்க தங்களது பணி நியமன முகமையின் விவரங்கள், அனுபவம் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை வழங்கச் சேவைக்கட்டணம் ஆகியவற்றைத் தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், கோவை என்ற முகவரிக்கு வரும்படி, ஜனவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வாகும் பணிநியமன முகமை உடனடியாக ஒப்பந்தப் பணியாளர்களை தேர்வு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...