கோவையில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள்

ஊதிய உயர்வு, பிடித்தம் செய்த தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மண்டல போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை, ஜனவரி 9

ஊதிய உயர்வு, பிடித்தம் செய்த தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மண்டல போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, திமுக, தொமுச உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தமிழக அரசு தரப்பில் நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில் பணிக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



இந்நிலையில், தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கோட்ட அலுவலகங்கள் முன் ஜனவரி 9ம் தேதியன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

அதன்படி, இன்று மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு கோவை மாவட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருவதால் காவல்துறையினர் அதிகளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...