கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதற்காக சகோதரி மகளைக் கொலை செய்த சகோதரன்!

சிங்காநல்லூர் பகுதியில் கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட சகோதரி மற்றும் அவரது மகளுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு சகோதரன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை, ஜனவரி 9

சிங்காநல்லூர் பகுதியில் கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட சகோதரி மற்றும் அவரது மகளுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு சகோதரன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அடுத்த நீலிக்கோணாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (54). இவரது சகோதரி பாக்கியம் (74). பாக்கியத்தின் மகள் சாந்தி. மணிகண்டன் தனது சகோதரி பாக்கியத்துடன் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் நடத்த பாக்கியத்திடம் மணிகண்டன் 4 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில் கொடுத்த பணத்தை பாக்கியம் தனது சகோதரனிடம் கேட்டுள்ளார். தொழில் நஷ்டம் காரணமாக பணம் தர முடியாத சூழலில் நேற்று (திங்களன்று) இரவு மணிகண்டன் தேனில் விஷம் கலந்து பாக்கியம், அவரது மகள் சாந்தி ஆகியோருக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில், அவரும், சாந்தியும் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பாக்கியத்திற்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொழில் நஷ்டம் காரணமாக தனது சகோதரி மகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...