கோவை, ஜனவரி 08
கோவை மலையேறும் கிளப்பும், தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து சாடிவயல் பகுதியில் மலையேறும் பயிற்சியை நடத்தியது.

உலகிலேயே மிகவும் சுவைமிக்க நீராகக் கருதப்படும் சிறுவாணி நீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை மலையேறும் குழுவும், தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து இந்தப் பயிற்சி நடைபெற்றது. இதில், 40 பேர் கலந்து கொண்டனர்.
இந்தப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மோகன்பிரசாந்த், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகிய சிறுவாணி தண்ணீர் அதன்பகுதிகளில் ஓடி வரும்போது, தண்ணீர் மூலிகை மருந்தாக மாறி வருகிறது. மேலும், ஆக்ஸிஜன் அளவு அதிகரித்தும் இருப்பதால், உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் நீண்ட ஆயுளைப் பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவுள்ள நீர் சுத்திகரிப்பு ஆலை வரை இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பயிற்சி மேற்கொண்டவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கோவை மலையேறும் கிளப்பும், தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து சாடிவயல் பகுதியில் மலையேறும் பயிற்சியை நடத்தியது.

உலகிலேயே மிகவும் சுவைமிக்க நீராகக் கருதப்படும் சிறுவாணி நீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை மலையேறும் குழுவும், தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து இந்தப் பயிற்சி நடைபெற்றது. இதில், 40 பேர் கலந்து கொண்டனர்.
இந்தப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மோகன்பிரசாந்த், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகிய சிறுவாணி தண்ணீர் அதன்பகுதிகளில் ஓடி வரும்போது, தண்ணீர் மூலிகை மருந்தாக மாறி வருகிறது. மேலும், ஆக்ஸிஜன் அளவு அதிகரித்தும் இருப்பதால், உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் நீண்ட ஆயுளைப் பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவுள்ள நீர் சுத்திகரிப்பு ஆலை வரை இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பயிற்சி மேற்கொண்டவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.