நஞ்சப்பா சலையில் மீண்டும் சாலை ஓர கடைகளை அமைக்க அனுமதி வழங்கக் கோரி நடைபாதை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை, ஜனவரி 8
நஞ்சப்பா சலையில் மீண்டும் சாலை ஓர கடைகளை அமைக்க அனுமதி வழங்கக் கோரி நடைபாதை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து கோவை மாநகர நடைபாதை நிறு வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், கோவை நஞ்சப்பா சலையில் நடைபாதையில் வியாபாரம் செய்து வந்த சிறு வியாபாரிகளை மேம்பாலம் அமைக்கும் பணியின்போது அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, சிவானந்தா காலனி மின்வாரிய அலுவலகம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடைகள் அமைக்க முற்பட்டபோது மின்வாரிய அலுவலக அதிகாரிகளும், காவல் துறையினரும் எங்களை கடை வைக்க அனுமதிக்கவில்லை.
மேலும், கடந்த 10 மாதங்களாக வியாபாரம் செய்ய முடியாத காரணத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்விச் செலவைக் கூட செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேம்பால பணிகள் நிறைவுற்ற நிலையில் தங்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி கடை வைத்து பிழைத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நஞ்சப்பா சலையில் மீண்டும் சாலை ஓர கடைகளை அமைக்க அனுமதி வழங்கக் கோரி நடைபாதை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து கோவை மாநகர நடைபாதை நிறு வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், கோவை நஞ்சப்பா சலையில் நடைபாதையில் வியாபாரம் செய்து வந்த சிறு வியாபாரிகளை மேம்பாலம் அமைக்கும் பணியின்போது அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, சிவானந்தா காலனி மின்வாரிய அலுவலகம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடைகள் அமைக்க முற்பட்டபோது மின்வாரிய அலுவலக அதிகாரிகளும், காவல் துறையினரும் எங்களை கடை வைக்க அனுமதிக்கவில்லை.
மேலும், கடந்த 10 மாதங்களாக வியாபாரம் செய்ய முடியாத காரணத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்விச் செலவைக் கூட செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேம்பால பணிகள் நிறைவுற்ற நிலையில் தங்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி கடை வைத்து பிழைத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.