கோவையில் கந்து வட்டி கேட்டு சிறுவனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண் ஒருவர் குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
கோவை, ஜனவரி 8
கோவையில் கந்து வட்டி கேட்டு சிறுவனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண் ஒருவர் குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகேயுள்ள கெம்பநாய்க்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி விஜயலட்சுமி. இத்தம்பதியினருக்கு கீர்த்தனா மற்றும் ஹரிஹரன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இன்று விஜயலட்சுமி தனது குடும்பத்தினருடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அம்மனுவில், 6 வருடத்திற்கு முன்னர் தனது கணவர் மருத்துவ சிகிச்சைக்காக தனியார் வாகன உரிமையாளர் மணிகண்டன் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் வட்டிக்கு வாங்கினேன். அதனை திரும்ப செலுத்திய போதும் மேலும் 60 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டுமென நிர்ப்பந்தித்து வருகிறார். மேலும், பணம் கேட்டு மிரட்டி வரும் மணிகண்டன் குடும்பத்தினர், தனது மகன் ஹரிஹரன் மீது தாக்குதல் நடத்தினார். இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், காவல் துறையினர் மணிகண்டனுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.
எனவே, அதிக கந்து வட்டி கேட்டு மிரட்டும் மண்கண்டன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கந்து வட்டி கேட்டு சிறுவனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண் ஒருவர் குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகேயுள்ள கெம்பநாய்க்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி விஜயலட்சுமி. இத்தம்பதியினருக்கு கீர்த்தனா மற்றும் ஹரிஹரன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இன்று விஜயலட்சுமி தனது குடும்பத்தினருடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அம்மனுவில், 6 வருடத்திற்கு முன்னர் தனது கணவர் மருத்துவ சிகிச்சைக்காக தனியார் வாகன உரிமையாளர் மணிகண்டன் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் வட்டிக்கு வாங்கினேன். அதனை திரும்ப செலுத்திய போதும் மேலும் 60 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டுமென நிர்ப்பந்தித்து வருகிறார். மேலும், பணம் கேட்டு மிரட்டி வரும் மணிகண்டன் குடும்பத்தினர், தனது மகன் ஹரிஹரன் மீது தாக்குதல் நடத்தினார். இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், காவல் துறையினர் மணிகண்டனுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.
எனவே, அதிக கந்து வட்டி கேட்டு மிரட்டும் மண்கண்டன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.