மாநகர சாலைகளில் பந்தயத்தில் ஈடுபட்டால் கைது: போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல்துறை ஆணையர் பேச்சு

இரு சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை, ஜனவரி 8

இரு சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாநகரில் சாலை விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி இன்று காலை அவினாசி சாலை அண்ணா சிக்னல் பகுதியில் நடைபெற்றது.



கங்கா மருத்துவமனை நிர்வாகம் மற்றும் கோவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கங்கா செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த 165 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவினாசி சாலையில் 10 இடங்களில் சாலை பாதுகாப்பு பிரச்சாரங்கள் மேற்கொண்டனர். கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்ற மாணவர்கள், சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.

முன்னதாக, கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கொடியசைத்து துவங்கி வைத்தார். 



தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- 

கோவை மாநகரில் மட்டும் நாள் ஒன்றிற்கு 300 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. ஆண்டிற்கு 1 லட்சம் புதிய வாகனங்கள் கோவையில் பதிவு செய்யப்படும் சூழலில் சாலை விரிவாக்கப்படாத சூழல் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடித்தால் தான் விபத்துக்களை குறைக்க முடியும்.



ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்குபவர்களே அதிக அளவில் உள்ளனர். மது போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் உபயோகித்துக் கொண்டு வாகனம் ஓட்டுதல் ஆகியவை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.



இது தொடர்பாக, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வலர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது.

மாநகரில் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுவோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட உள்ளது. அவ்வாறு பந்தயத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார், கங்கா மருத்துவமனையின் தலைவர் எஸ். ராஜசேகரன் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...