ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக சசிகலாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சசிகலா ஆஜராவாரா என்பதை நீதிமன்றம் நாளை அறிவிக்கும் எனவும் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
கோவை, ஜனவரி 7
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக சசிகலாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சசிகலா ஆஜராவாரா என்பதை நீதிமன்றம் நாளை அறிவிக்கும் எனவும் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்தின் விசாரணை அதிகாரி ஆறுமுகசாமி இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவுக்கு வழக்கறிஞர் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு சசிகலா ஆஜராவாரா என்பதை நாளை நீதிமன்றத்தின் அறிவிப்பின் போது தான் தெரியும்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 15-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது" என்றார்.
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக சசிகலாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சசிகலா ஆஜராவாரா என்பதை நீதிமன்றம் நாளை அறிவிக்கும் எனவும் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்தின் விசாரணை அதிகாரி ஆறுமுகசாமி இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவுக்கு வழக்கறிஞர் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு சசிகலா ஆஜராவாரா என்பதை நாளை நீதிமன்றத்தின் அறிவிப்பின் போது தான் தெரியும்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 15-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது" என்றார்.