தேசிய அளவில் சிறந்த காவல் நிலையமாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு

தேசிய அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் விருது வழங்கினார்.


கோவை, ஜனவரி 6

தேசிய அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட  கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் விருது வழங்கினார்.

குற்றத்தடுப்பு, கொள்ளை போன பொருட்கள் மீட்கப்படுதல், சுகாதாரம் மற்றும் மழை நீர் சேகரிப்பு ஆகியவற்றை சிறப்பாக மேலாண்மை செய்யும் காவல் நிலையங்களுக்கு விருது வழங்க இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.  இந்த விருதுக்காக இந்தியாவில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களை காவல்துறை வளர்ச்சி மையம்  பட்டியலிட்டது.

இதற்காக தமிழக அரசின் சார்பில்  கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள எல்லைப்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது இன்று வழங்கப்பட்டது.

அதில், முதல் பரிசை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் பெற்றுள்ளது. இந்த விருதினை அக்காவல்நிலைய ஆய்வாளருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வழங்கி கவுரவித்தார். 2-ம் இடத்தை தெலுங்கானா மாநிலம் பஞ்சகுட்டா காவல்நிலையமும், 3-வது இடத்தை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குடும்பா காவல்நிலையமும் பிடித்தது. 

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...