வெகுவிமர்சையாக நடந்த 26-ம் ஆண்டு ஜெகநாதர் தேர்திருவிழா : ஏராளமானோர் சுவாமி தரிசனம்


கோவை, ஜனவரி 06

கோவையில் இஸ்கான் அமைப்பு சார்பில் 26-வது ஆண்டாக நடைபெற்ற ஜெகநாதர் தேர்த்திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 



கோவையில் ஆண்டுதோறும் இஸ்கான் எனப்படும் கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் தேர்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 26-வது ஆண்டாக நடைபெற்ற திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட 42 அடி உயரத் தேரில் ஜெகநாதர், சுப்ரதாதேவி சிலைகளுடன் பலதேவர் சிலைகளும் அமைக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவற்றுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.



மேலும், ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்ற முழக்கங்களை எழுப்பியபடி, அவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். பொதுவாக, மக்கள் கோவில்களில் கடவுளை வழிபடச் செல்லும் நிலையில், மக்களைக் காண கடவுள் வருவதாக நம்பிக்கையுடன் இத்தேர் திருவிழா வருடந்தோறும் நடத்தப்பட்டு வருவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். தேர்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் உற்சாகத்துடன் ஆடிப்பாடிச் சென்ற காட்சிகள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...