கோவை, ஜனவரி 06
கோவையின் பெருமையை போற்றும் வகையில் கடந்த ஜனவரி 5ம் தேதி துவங்கிய கோவை விழா வரும் 12-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், கலை, விளையாட்டு, இசை, இலக்கியம், உணவு முறை, தொழில்நுட்பம், மருத்துவம் என பல்வேறு துறைகளின் சார்பில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை விழா குழுவினருடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் இணைந்து ஸ்வச் பாரத் விழிப்புணர்வு தெரு நாடகம், விழிப்புணர்வு நடனம், விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள், திறந்தநிலை அசுத்தப்படுத்துதல் குறித்து கல்வி மற்றும் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் விழிப்புணர்வு கல்வி போன்ற தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை நடத்தினர்.
முன்னதாக, எஸ்.என்.ஆர் சன்ஸ் டிரஸ்ட் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. டி. லட்சுமி நாராயணசுவாமி இந்த நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். முதன்மை வர்த்தக அலுவலர் எல். சுவாதிராஹித், முதல்வர் மற்றும் செயலாளர் கே. கருணாகரன், இளம் இந்தியத் தலைவர்கள் பிரசன்ன மற்றும் குமரவேல் மற்றும் 200-க்கும் மேற்பட்ட என்எஸ்எஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோவையின் பெருமையை போற்றும் வகையில் கடந்த ஜனவரி 5ம் தேதி துவங்கிய கோவை விழா வரும் 12-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், கலை, விளையாட்டு, இசை, இலக்கியம், உணவு முறை, தொழில்நுட்பம், மருத்துவம் என பல்வேறு துறைகளின் சார்பில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை விழா குழுவினருடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் இணைந்து ஸ்வச் பாரத் விழிப்புணர்வு தெரு நாடகம், விழிப்புணர்வு நடனம், விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள், திறந்தநிலை அசுத்தப்படுத்துதல் குறித்து கல்வி மற்றும் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் விழிப்புணர்வு கல்வி போன்ற தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை நடத்தினர்.
முன்னதாக, எஸ்.என்.ஆர் சன்ஸ் டிரஸ்ட் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. டி. லட்சுமி நாராயணசுவாமி இந்த நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். முதன்மை வர்த்தக அலுவலர் எல். சுவாதிராஹித், முதல்வர் மற்றும் செயலாளர் கே. கருணாகரன், இளம் இந்தியத் தலைவர்கள் பிரசன்ன மற்றும் குமரவேல் மற்றும் 200-க்கும் மேற்பட்ட என்எஸ்எஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.