சிறுவாணி நீரைப்போல் சிறப்பு மிக்கவர்கள் கோவை ஊர்காவல் படையினர்- மாநகர காவல்துறை ஆணையர் புகழாரம்

கோவை, ஜனவரி 06

சிறுவாணி நீரைப் போல் சிறப்பு மிக்கவர்கள் கோவை மாநகர ஊர்காவல் படையினர் என்று ஊர்காவல் படை தின விழாவில் மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா புகழாரம் சூட்டியுள்ளார்.



ஆண்டுதோறும் டிசம்பர் 6-ம் தேதியன்று ஊர்காவல் படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு இன்று கோவை மாநகர ஊர்காவல் படையின் பிராந்திய தளபதி டி.கே. தனசேகர் தலைமையில் மாநகர ஊர்காவல் படையினரின் அணி வகுப்பு மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.



இதைத் தொடர்ந்து, அவினாசி சாலையில் உள்ள காவல்துறை சமூகக் கூடத்தில் ஊர்காவல் படை தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கோவை மாநகர ஆணையர் கே. பெரியய்யா மற்றும் துணை ஆணையர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய ஊர்காவல் படையினருக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

விழாவில் மாநகர காவல்துறை ஆணையர் பேசுகையில், "2-ஆம் உலகப்போரின் போது தோன்றியது தான் இந்த ஊர்க்காவல் படை. 1963-ம் ஆண்டு முதல் தேசிய அளவில் ஊர்க்காவல் படை விரிவுபடுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 622 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படையினரின் பங்கு மிக அதிகமாக இருந்தது. அப்போது, கோவையில் இருந்து மட்டும் 468 பேர் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தனர். கோவையை பொறுத்தவரை ஊர்க்காவல் படையினர் சிறந்த தலைமையை பெற்றுள்ளனர். உலகின் மிகச்சிறந்த நீராக சிறுவாணி நீர் உள்ளது. அதன் சிறப்பைப் போலவே கோவை ஊர்க்காவல் படையினரும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளனர்." இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...