கோவை, ஜனவரி 06
கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் 10-வது ஆண்டு கோவை விழா- 2018 கோவையில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-வது நாளான இன்று யங் இந்தியன்ஸ், கோவை ஆர்ட் பவுண்டேஷன் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் திட்டச்சாலையில் கண்கவர் ஓவியக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஏராளமான ஓவியர்கள் பங்கேற்று தங்களுடைய ஓவியங்களைப் பொதுமக்களின் பார்வைக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளனர். ஓவியச் சந்தையின் நுழைவாயிலில் பலவண்ண குடைகளின் மேற்கூரை அலங்காரம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கோவையைச் சேர்ந்த ஓவியர் மோகன்ராஜ் இதுகுறித்து கூறுகையில், "20 ஆண்டுகளாக ஓவியங்களை வரைந்து வருகிறேன். ஆயில் பெயிண்ட், அகர்லிக் பெயிண்ட் மூலமாக விதவிதமான ஓவியங்களை வரைந்து வருகிறேன். சிறுவயதிலேயே ஓவியங்களை வரைவதில் ஆர்வம் எனக்குள் உண்டானது. இதுவரை ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளேன். இயற்கை காட்சிகள், பிரபல தலைவர்கள், நமது பண்பாடு, பாரம்பரியத்தை விளக்கும் படங்கள் வரைந்துள்ளேன்.
ஓவியர்கள் அதிக அளவில் உருவாக வேண்டும். இந்தக் கலை வளர இளம் ஓவியர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பென்சில் ஓவியர் நாக திவ்யா கூறும்போது:- "ஓவியங்கள் வரைவதில் மிகுந்த ஆர்வம் உள்ளது. என்னுடைய ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் ஓவியங்களை வரைந்து வருகிறேன். இதற்காக எந்தவித பயிற்சிக்கும் செல்லவில்லை. தானாகவே ஓவியங்கள் வரையக் கற்றுக்கொண்டேன்.
பென்சில் மூலமாக ஓவியங்களை கருப்பு, வெள்ளை மற்றும் வண்ண ஓவியங்களை வரைந்து வருகிறேன். இணையதளத்தில் புதிய, புதிய மடல்களைப் பார்த்து அதைப்போலவே வரைவேன். ஓவியம் வரைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதிகம் ஆர்வம் காட்டி வருகிறேன்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், டிஜிட்டல் ஓவியங்களின் வருகையால் ஓவியக்கலை கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது. இக்கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஓவியக்கலையைப் பெரும்பாலும் யாரும் ஊக்குவிப்பது இல்லை. ஓவியர்களையும், அவர்கள் வரையும் ஓவியங்களையும் அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் 10-வது ஆண்டு கோவை விழா- 2018 கோவையில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-வது நாளான இன்று யங் இந்தியன்ஸ், கோவை ஆர்ட் பவுண்டேஷன் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் திட்டச்சாலையில் கண்கவர் ஓவியக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஏராளமான ஓவியர்கள் பங்கேற்று தங்களுடைய ஓவியங்களைப் பொதுமக்களின் பார்வைக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளனர். ஓவியச் சந்தையின் நுழைவாயிலில் பலவண்ண குடைகளின் மேற்கூரை அலங்காரம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கோவையைச் சேர்ந்த ஓவியர் மோகன்ராஜ் இதுகுறித்து கூறுகையில், "20 ஆண்டுகளாக ஓவியங்களை வரைந்து வருகிறேன். ஆயில் பெயிண்ட், அகர்லிக் பெயிண்ட் மூலமாக விதவிதமான ஓவியங்களை வரைந்து வருகிறேன். சிறுவயதிலேயே ஓவியங்களை வரைவதில் ஆர்வம் எனக்குள் உண்டானது. இதுவரை ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளேன். இயற்கை காட்சிகள், பிரபல தலைவர்கள், நமது பண்பாடு, பாரம்பரியத்தை விளக்கும் படங்கள் வரைந்துள்ளேன்.
ஓவியர்கள் அதிக அளவில் உருவாக வேண்டும். இந்தக் கலை வளர இளம் ஓவியர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பென்சில் ஓவியர் நாக திவ்யா கூறும்போது:- "ஓவியங்கள் வரைவதில் மிகுந்த ஆர்வம் உள்ளது. என்னுடைய ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் ஓவியங்களை வரைந்து வருகிறேன். இதற்காக எந்தவித பயிற்சிக்கும் செல்லவில்லை. தானாகவே ஓவியங்கள் வரையக் கற்றுக்கொண்டேன்.
பென்சில் மூலமாக ஓவியங்களை கருப்பு, வெள்ளை மற்றும் வண்ண ஓவியங்களை வரைந்து வருகிறேன். இணையதளத்தில் புதிய, புதிய மடல்களைப் பார்த்து அதைப்போலவே வரைவேன். ஓவியம் வரைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதிகம் ஆர்வம் காட்டி வருகிறேன்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், டிஜிட்டல் ஓவியங்களின் வருகையால் ஓவியக்கலை கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது. இக்கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஓவியக்கலையைப் பெரும்பாலும் யாரும் ஊக்குவிப்பது இல்லை. ஓவியர்களையும், அவர்கள் வரையும் ஓவியங்களையும் அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.