இந்தியாவில் முதன்முறையாக ஓஃபோ நிறுவனத்தின் மிதிவண்டி அறிமுகம்

கோவை, ஜனவரி 06

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் முதன் முறையாக ஓஃபோ (Ofo)  நிறுவனத்தின் மிதிவண்டி அறிமுகம் செய்யப்பட்டது.

மொபைல் பயன்பாட்டின் மூலம் இயக்கப்படும் உலகின் முதன்மையான மிதிவண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, கல்லூரி வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட மிதிவண்டிகள் பயன்படுத்தப்படும். வளாகத்தில் எளிதாகச் செல்லும் பாதையில் மிதிவண்டிகள் கிடைக்கும். எந்த நிறுத்துதல் நிலையங்களும் தேவையில்லை. ஓஃபோவின் மிதிவண்டிகள் பகிர்வு பயனர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

ஸ்ரீ சங்கர் வாணவராயர், இணை தாளாளர், கேசிடி சிறப்பு விருந்தினரையும், ஓஃபோ நிறுவனத்தையும் மற்றும் கேசிடி ஊழியர்களையும் வரவேற்றார்.  கோவை மாநகராட்சி ஆணையர் கே. விஜயகார்த்திகேயன் இந்நிகழ்ச்சியை துவங்கிவைத்தார். 

”இந்த ஆரோக்கியமான கருத்தை நாம் இப்போது ஒரு சிறிய அளவில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கியுள்ளோம், இந்த மாதிரியை நகருக்குள் பிரதிபலிக்கும் திட்டங்களை நாங்கள் கொண்டுள்ளோம். இந்த முயற்சி காற்று மாசு படுவதை குறைக்கும்”  என கோவை மாநகராட்சி ஆணையர் கே. விஜயகார்த்திகேயன் கூறினார். 

பொதுக்கொள்கை மற்றும் தகவல் தொடர்பு இயக்குநரான ரஜர்ஷி சஹாய் கூறுகையில், "குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் எங்கள் மிதிவண்டி பயன்படுத்தப்படுவதைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஜனவரி மாதம் தொடங்கி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு சுத்தமான மற்றும் ஆரோக்கியமான போக்குவரத்து விருப்பத்தை வழங்கும். இந்தத் திட்டம் மூலம், மக்களுக்கு 'சுலபமாகப் பயன்படுத்தக்கூடிய' மிதிவண்டி பகிர்வு அனுபவத்தின் மூலம் மக்களுக்கு வழங்குவதோடு, மிதிவண்டி ஓட்டுதல் தொடர்பான பல்வேறு நன்மைகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் விரும்புகிறோம். கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசிடம் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் மிதிவண்டியினை பயன்படுத்த எந்தக் கட்டணமும் இல்லை”. கூறினார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...