கோவை, டிசம்பர் 30
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை - திருச்சி சாலையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

சுங்கம் பகுதியில் ரோட்டரேக்ட் சங்கத்தின் சார்பில், ”மண்ட பத்திரம்” என்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைக் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சி. கோடிசெல்வன் தொடங்கி வைத்தார். இந்த வாகனப் பேரணியானது, ஆர்.எஸ்.புரம் முதல் ஜிசிடி வரை சென்றது. அப்போது, வாகன ஓட்டிகளுக்கு, ஹெல்மெட் அத்தியாசவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக, ”வி லவ் ஹெல்மெட்” என்ற வாசகத்தை, ஹெல்மெட் அணியாமல் ஓட்டி வருபவர்களின் இருசக்கரவாகனங்களில் ஒட்டினர். இதில், 80-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் மற்றும் சாக்லெட்டுகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய ரோட்டரேக்ட் கிளப்பின் சமூக சேவை இயக்குநர் பி. சிவசங்கர், ஹெல்மெட் அணிவது குறித்த இந்த விழிப்புணர்வு பேரணி, வரும்காலத்தில் பிற பகுதிகளிலும் நடத்தப்படும். என்றார்.

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை - திருச்சி சாலையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

சுங்கம் பகுதியில் ரோட்டரேக்ட் சங்கத்தின் சார்பில், ”மண்ட பத்திரம்” என்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைக் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சி. கோடிசெல்வன் தொடங்கி வைத்தார். இந்த வாகனப் பேரணியானது, ஆர்.எஸ்.புரம் முதல் ஜிசிடி வரை சென்றது. அப்போது, வாகன ஓட்டிகளுக்கு, ஹெல்மெட் அத்தியாசவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக, ”வி லவ் ஹெல்மெட்” என்ற வாசகத்தை, ஹெல்மெட் அணியாமல் ஓட்டி வருபவர்களின் இருசக்கரவாகனங்களில் ஒட்டினர். இதில், 80-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் மற்றும் சாக்லெட்டுகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய ரோட்டரேக்ட் கிளப்பின் சமூக சேவை இயக்குநர் பி. சிவசங்கர், ஹெல்மெட் அணிவது குறித்த இந்த விழிப்புணர்வு பேரணி, வரும்காலத்தில் பிற பகுதிகளிலும் நடத்தப்படும். என்றார்.
