வனப்பகுதி மலைவாழ் கிராமங்களில் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

கோவை, டிசம்பர் 27

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுவன மேலாண்மை குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வனஅலுவலர் ந.சதீஸ் மாவட்ட கூட்டுவன மேலாண்மைகுழு உறுப்பினர்கள், அனைத்து திட்ட கிராம வனக்குழு உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் வனப்பகுதி மலைவாழ் கிராமங்களில், ஆட்சியர் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, மாவட்ட அளவிலான கூட்டுவன மேலாண்மை குழுவின் மூலம் வனப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தல், பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காரமடை பகுதிகளில் உள்ள வனகிராமங்களான சேத்துமடை, பூச்சிமரத்தூர், நெல்லிமரத்தூர், இருளர்பதி, பாறையன்கோம்பை உள்ளிட்ட கிராமங்களில் 63 பயனாளிகளுக்கு கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது. நம்பர் 4 வீரப்பாண்டி பகுதிக்கு அருகாமையில் பூலப்பதி கிராமத்தில் ரூ. 9.19 லட்சம் மதிப்பில் சூரியஒளியில் இயங்கும் மோட்டார் வசதி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.  

தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ்கள் உரிய விசாரணையின் பேரில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. வெள்ளருக்கம்பாளையம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேரண், கிணறு கிராமத்தில் 400 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், புதிய நியாயவிலைக் கடை அமைக்க துரித நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்துப்பட்டுள்ளது. தேக்கம்பட்டியில் ரூ. 7.20 லட்சம் மதிப்பில் 20 சோலார் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் நெல்லிமலையில் இருந்து வரும் உபரிநீரை தடுப்பணைகட்டி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.    

தொடர்ந்து, மலைவாழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படாத வகையில், அகழிகள் ஏற்படுத்துதல் தொலைதூர வெளிச்சம் தரக்கூடிய டார்ச்லைட்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மலைவாழ் மக்கள் சுயசார்பு அடையும் வகையில், சிறுவன சாகுபடி மேற்கொள்ளவும், தங்களால் உற்பத்திசெய்யக்கூடிய கைவினைப் பொருட்களை சந்தைபடுத்தவும் வனஅலுவலர்கள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இக்கூட்டத்தில், மாவட்ட கூட்டுவன மேலாண்மைகுழுவினரால் வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்து உரியப் பரிசீலனைகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...