சசிகுமார் கொலை வழக்கு : முபாரக்கை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

கோவை, டிசம்பர் 26

சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முபாரக்கை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் மனு தொடுத்துள்ளனர்.



இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார் (35) கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதியன்று மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து துடியலூர் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தினால் வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சதாம் (27), அபுதாகிர் (27) மற்றும் ஜி.எம். நகரைச் சேர்ந்த சுபைர் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில், அபுதாகிர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட முபாரக் (28) தலைமறைவாக இருந்த நிலையில், பொள்ளாச்சி வடக்கிபாளையத்தில் அவரைக் கைது செய்தனர். பின்னர், இன்று சிறப்பு நீதிமன்றத்தில் முபாரக் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி குணசேகரன், அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே, முபாரக்கை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் மனு அளித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...