எம்எல்ஏ-வாக டிச.,29-ம் தேதி பதவியேற்கிறார் டிடிவி தினகரன்

டிசம்பர் 26

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் வரும் 29ம் தேதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொள்கிறார். தலைமை செயலகத்தில் மதியம் 1.30 மணியளவில் நடக்கும் நிகழ்ச்சியில் சபாநாயகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஆர்.கே நகர் தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதல் முன்னிலை வகித்து வந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் எல்லா சுற்றுகளிலும் முன்னிலை வகித்த அவர், 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40 ஆயிரத்து 707 வாக்குகள் கூடுதலாகவே பெற்று வென்ற அவர் தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் முத்திரை பதித்தார்.

தினகரனின் வெற்றி தமிழக அரசியலில் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓயாத நிலையில், வரும் 29-ம் தேதி அவர் முறைப்படி எம்எல்ஏ-வாக பதவியேற்க உள்ளார். மதியம் 1.30 மணிக்கு சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார். பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, சட்டசபைக்குள் முதன் முறையாக அவர் ஆர்.கே. நகர் எம்எல்ஏ-வாக நுழைய உள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...