ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஸ்டாலின் விளக்கம்


டிசம்பர் 26

வாக்குக்கு பணம் கொடுப்பதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டின் காரணமாகவே, ஆர்.கே. நகரில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்ததாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் சக்தி திமுகவுக்கு மட்டுமே உள்ளது. திமுகவின் தனித்தன்மையுடனும், தன்மானத்துடனும் உரசிப் பார்க்க வேண்டாம். களத்தில் தோற்றால் விருதாகவும், தோற்றால் விழுப்புண்ணாகவும் கருதும் பக்குவம் திமுகவுக்கு உள்ளது. ஊழல் கடலில் மூழ்கி கொண்டிருப்போர் மூலம் ஆட்சி மாற்றம் வரும் என கருதுவது பகல் கனவு. ஊழல்வாதிகளால் நல்லாட்சி வரும் என கருதுவது கற்பனையின் உச்சகட்டம்.

திமுகவை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் விஷம பிரச்சாரத்தை நிறுத்தி கொள்ள வேண்டும். பணநாயகத்திற்கு பலி கடா ஆகிவிட்டது ஆர்.கே. நகர். இதை மறைத்துவிட்டு விஷம பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அவதூறு பரப்புவோர் ஏமாறுவது நிச்சயம். புது உத்வேகத்துடன் திமுக செயல்பாடு தொடரும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...