கார் வரி ஏய்ப்பு விவகாரம்: வேலைக்காரன் பட ”வில்லன்” போலீஸாரால் கைது

டிசம்பர் 25

கார் வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் கைதாகி பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

நடிகர், நடிகைகள் சொகுசு கார்களை போலியாக முகவரி கொடுத்து புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சொகுசு கார்கள் வாங்கி வேறு மாநிலத்தில் பதிவு செய்து இருந்தாலும், காரை கேரளாவிலும் பதிவு செய்யவேண்டும் என்று அங்கு வாகன சட்டம் உள்ளது. இந்த விவகாரத்தில் நடிகை அமலாபால், பகத்பாசில், சுரேஷ் கோபி ஆகியோர் மீது வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கேரள அதிகாரிகள் புதுச்சேரி போக்குவரத்து அதிகாரிகளுடன் விசாரித்தனர். இந்த நிலையில், மலையாள நடிகர் பகத் பாசிலும், புதுச்சேரி லாஸ்பேட்டை, புதுப்பேட்டை முகவரியைக் கொடுத்து காரை பதிவு செய்து இருப்பது அம்பலமாகி உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இது போன்ற மோசடியில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி யார், யார் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்து அவர்கள் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர். இதனால் நடிகர், நடிகைகள் கலக்கம் அடைந்தனர். 

இந்த நிலையில், வரி ஏய்ப்பு வழக்கில் நடிகர் பகத் பாசில் இன்று திருவனந்தபுரம் குற்றப்பிரிவில் ஆஜரானார். அங்கு அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அங்கு கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பகத் பாசில் தனது தவறை ஒப்புக் கொண்டதாகவும், அதற்குரிய அபராத தொகையை கட்டிவிடுவதாகவும் கூறி உள்ளதாகக் கேரள ஊடகங்கள் கூறி உள்ளன.

பகத் பாசில் பிரபல இயக்குநர் பாசிலின் மகன் ஆவார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் வேலைக்காரன் படத்தில் இவர் வில்லனாக நடித்து உள்ளார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...