மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி

கோவை, டிசம்பர் 24

தமிழக எல்லைப்பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட்டில் அழுகிய நிலையில் சிறுத்தைப்புலியின் உடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது உடல்நலக் குறைவால் இறந்திருக்கலாம் என வனத்துறை கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தமிழக- கேரள எல்லைப்பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெள்ளைச்சாமி என்பவரது மகன் திலீப்குமார் (12) சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது தொழிலாளர்கள் குடியிருப்புக்குள்  கோழியை பிடிப்பதற்காக வந்த சிறுத்தைப்புலி கோழியைப் பிடித்து விட்டு ஓடிய போது திலீப்குமார் மீது மோதியதில் அந்த சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்து அவனது நெற்றியில் காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், வனத்துறையினர் கூண்டு வைக்கவில்லை. இருப்பினும், அப்பகுதியில் உலா வந்த சிறுத்தையை பிடிக்க ஆங்காங்கே கேமரா வைத்து கண்காணித்தனர். ஆனால் சிறுத்தைப்புலி கேமராவில் பிடிபடவில்லை.



இந்நிலையில் இன்று மளுக்கப்பாறை எஸ்டேட் டிவிசன் எடமலை ரேஞ்சுக்கு உட்பட்ட 10-வது லைன் பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் துர்நாற்றம் வந்த பகுதியில் சென்று பார்த்த போது புதருக்குள் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த எடமலை ரேஞ்ச் வனத்துறை அதிகாரி ஜெயகுமார் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சிறுத்தையின் உடலை கைப்பற்றினர். பின்னர் வனத்துறை கால்நடை மருத்துவர் டோமி இறந்த சிறுத்தையை உடற்கூறு ஆய்வு செய்தார். இது உயிரிழந்து மூன்று நாட்கள் இருக்கும் எனவும், உடல்நலக்குறைவால் அச்சிறுத்தை இறந்துள்ளது எனவும் வனத்துறை கால்நடை மருத்துவர் டோமி தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...