டிசம்பர், 24
கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர் களப்பணிகள் மூலம் பல்வேறு குளங்களையும், நீர்நிலைகள் சீரமைத்து, ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வருகின்றனர்.
அதன்படி, இன்று (டிசம்பர் 24) 46-வது வார களப்பணியாக உக்கடம் பெரியகுளத்தில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து தூய்மை பணி மேற்கொண்டனர். மேலும், இதனைத்தொடர்ந்து, குளத்தின் அருகில் உள்ள சாலைகளிலும், மீன் விற்பனை வளாகத்திலும் பிளாஸ்டிக் உபயோகிப்பதால் வரும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்புடன் இஎப்ஐ கோயம்புத்தூர் உறுப்பினர்களும் இணைந்து களப்பணியாற்றினர்.
கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர் களப்பணிகள் மூலம் பல்வேறு குளங்களையும், நீர்நிலைகள் சீரமைத்து, ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வருகின்றனர்.
அதன்படி, இன்று (டிசம்பர் 24) 46-வது வார களப்பணியாக உக்கடம் பெரியகுளத்தில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து தூய்மை பணி மேற்கொண்டனர். மேலும், இதனைத்தொடர்ந்து, குளத்தின் அருகில் உள்ள சாலைகளிலும், மீன் விற்பனை வளாகத்திலும் பிளாஸ்டிக் உபயோகிப்பதால் வரும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்புடன் இஎப்ஐ கோயம்புத்தூர் உறுப்பினர்களும் இணைந்து களப்பணியாற்றினர்.