ஜெ., வீடியோவில் தவறு இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: புகழேந்தி

கோவை, டிசம்பர் 23

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவில் தவறு இருப்பதாக நிரூபித்தால், அரசியலை விட்டே வெளியேறத் தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவை சாய்பாபாகாலனியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார். இந்த வெற்றி திருப்புமுனையை ஏற்படுத்தும். ஒருசிலரை தவிர அனைவரும் டிடிவி தினகரன் பக்கம் வந்துவிடுவார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டதற்கும், டிடிவி தினகரனுக்கும் தொடர்பு இல்லை. அந்த வீடியோவை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவில் தவறு இருக்கிறது என நிருபீக்கப்பட்டால், நாங்கள் அரசியலை விட்டே வெளியேறத் தயார்.

ஜெயலலிதாவின் மகள் என அம்ருதா எந்த ஆதாரமும் இல்லாமல் பேசுவது வேதனையளிக்கிறது. சோபன்பாபு தந்தை என அம்ருதா சொல்லாதது ஏன்..? என ஜெயலலிதா புகழை கெடுக்கும் வகையில் நீதிமன்றம் கேள்வி எழுப்புவது பாராட்டத்தக்கது அல்ல. பொய் பிரச்சாரம் செய்யும் அம்ருதா மீது முதலமைச்சர் ஏன் வழக்கு தொடரவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்வேன்.

2ஜி தீர்ப்பை நாங்கள் வரவேற்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. மேல்முறையீட்டு வழக்கைத் திமுகவினர் சந்திப்பார்கள். மதுசூதன் வெற்றி பெற்று அமைச்சராகி விடுவாரோ என்ற பயம் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உள்ளது. குக்கர் சின்னத்தில் பொதுத் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார். டிடிவி தினகரன் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் செல்லும் போது, யார் யார் ஸ்லீப்பர் செல் என்பது தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...