ரூ. 2,000 நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டம் கிடையாது : மத்திய அரசு

டிசம்பர் 22 

2,000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறும் திட்டம் கிடையாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

கறுப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. மாறாக, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டது. இதனையடுத்தே, இரண்டாயிரம் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவியது. மத்திய அரசு திரும்பப்பெற இருப்பதாகத் தகவல் வெளியாகின. ஆனால், அதனை மத்திய அரசு நிராகரித்தது. 

இந்நிலையில், புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுவதையும், புதியதாக அச்சடிப்பதையும் ஆர்பிஐ நிறுத்தலாம் என பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையில் கூறப்பட்டது. 

இதனையடுத்து, மத்திய அரசு புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்ப பெறுகிறது எனத் தகவல்கள் பரவியது. அதனை மத்திய அரசு மறுத்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில், “யூகங்கள் உருவாகி வருகிறது. இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவை அனைத்தும் தவறானவை. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் எதுவும் அரசு தரப்பில் அறிவிக்கப்படாத வரையில் இதனை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். என்றார். 

Newsletter

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...