ரூ. 2,000 நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டம் கிடையாது : மத்திய அரசு

டிசம்பர் 22 

2,000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறும் திட்டம் கிடையாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

கறுப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. மாறாக, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டது. இதனையடுத்தே, இரண்டாயிரம் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவியது. மத்திய அரசு திரும்பப்பெற இருப்பதாகத் தகவல் வெளியாகின. ஆனால், அதனை மத்திய அரசு நிராகரித்தது. 

இந்நிலையில், புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுவதையும், புதியதாக அச்சடிப்பதையும் ஆர்பிஐ நிறுத்தலாம் என பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையில் கூறப்பட்டது. 

இதனையடுத்து, மத்திய அரசு புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்ப பெறுகிறது எனத் தகவல்கள் பரவியது. அதனை மத்திய அரசு மறுத்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில், “யூகங்கள் உருவாகி வருகிறது. இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவை அனைத்தும் தவறானவை. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் எதுவும் அரசு தரப்பில் அறிவிக்கப்படாத வரையில் இதனை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். என்றார். 

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...