ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் முன் இருதய நிபுணர் தினேஷ் ஆஜர்

டிசம்பர் 22

ஜெயலலிதாவுக்கு இறுதியாக அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து இருதய சிகிச்சை மருத்துவர் தினேஷ் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு நியமித்தது. இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சை மருத்துவர் தினேஷ் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

ஜெயலலிதாவுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி இதய செயலிழப்பு ஏற்பட்டது. அப்போது, மருத்துவர் தினேஷ் சிகிச்சை அளித்தார். அதன் அடிப்படையில் அவர் இன்று ஆஜராகி நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவுக்கு இறுதியாக அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? நீங்கள் சிகிச்சை அளித்தபோது அவருக்கு உயிர் இருந்ததா? உடல்நிலை தேறி வந்தவர் திடீரென பின்னடைவு ஏற்படக்காரணம் என்ன? என்பது பற்றி மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...