கோவையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி : மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

கோவை, டிசம்பர் 22

கோவையில் விஷவாயு தாக்கி தங்கப்பட்டறை தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்துத் தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்கப்பட்டறை நடத்தி வருபவர் ரவிசங்கர். நேற்றிரவு நள்ளிரவு தங்கப்பட்டறையில் உள்ள கழிவு நீர்த் தொட்டியை சுத்தப்படுத்துமாறு ரவிசங்கர் தனது பட்டறை தொழிலாளர்களிடம் கூறியதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அங்குப் பணிபுரிந்து வந்த சூர்யா, ஏழுமலை மற்றும் கவுரி சங்கர் ஆகிய மூன்று பேரும், சுத்தப்படுத்தும் பணிக்காக கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கினர். 

அப்போது, தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த ஆர்.எஸ்.புரம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, 3 பேரின் உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

மேலும், தலைமறைவாக உள்ள பட்டறை உரிமையாளர் ரவி சங்கர் மீது அஜாக்கிரதையாகச் செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்ற வழக்கினை பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். 

இந்த நிலையில், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக, மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி உட்பட அனைத்துத் தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகையும், பலியானவர்களின் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்துணைப் பொதுச்செயலாளர் யு.கே சிவஞானம், வெண்மணி, பன்னீர்செல்வம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த சுசிக்கலையரசன் ஆகியோர் இந்த மனுவை அளித்தனர். 

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊர்வலமாக வந்து மாவட்ட அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...