கோவையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி : மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

கோவை, டிசம்பர் 22

கோவையில் விஷவாயு தாக்கி தங்கப்பட்டறை தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்துத் தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்கப்பட்டறை நடத்தி வருபவர் ரவிசங்கர். நேற்றிரவு நள்ளிரவு தங்கப்பட்டறையில் உள்ள கழிவு நீர்த் தொட்டியை சுத்தப்படுத்துமாறு ரவிசங்கர் தனது பட்டறை தொழிலாளர்களிடம் கூறியதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அங்குப் பணிபுரிந்து வந்த சூர்யா, ஏழுமலை மற்றும் கவுரி சங்கர் ஆகிய மூன்று பேரும், சுத்தப்படுத்தும் பணிக்காக கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கினர். 

அப்போது, தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த ஆர்.எஸ்.புரம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, 3 பேரின் உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

மேலும், தலைமறைவாக உள்ள பட்டறை உரிமையாளர் ரவி சங்கர் மீது அஜாக்கிரதையாகச் செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்ற வழக்கினை பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். 

இந்த நிலையில், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக, மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி உட்பட அனைத்துத் தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகையும், பலியானவர்களின் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்துணைப் பொதுச்செயலாளர் யு.கே சிவஞானம், வெண்மணி, பன்னீர்செல்வம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த சுசிக்கலையரசன் ஆகியோர் இந்த மனுவை அளித்தனர். 

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊர்வலமாக வந்து மாவட்ட அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...