டிசம்பர் 21
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 77 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயம் என 59 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். தொகுதியில் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 51 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணிக்குள் வந்தவர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 77 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.