வடமாநில பெற்றோரால் கொடுமைப்படுத்தப்பட்ட இரு சிறுவர்கள்

திருப்பூர், டிசம்பர் 21

திருப்பூரில் வடமாநில பெற்றோரால் கொடுமைப்படுத்தப்பட்ட இரு சிறுவர்கள் காவல்துறையால் மீட்பு. தலைமறைவான பெற்றோர் குறித்து போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் . இந்நிலையில் திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிபாளையத்தில் சில நாட்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் இரு குழந்தைகளுடன் குடிபுகுந்துள்ளனர் . 

அந்த தம்பதி வந்ததில் இருந்தே குழந்தைகளை கொடுமைபடுத்தியுள்ளனர் . இந்நிலையில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர் . அப்போது அவர்களது 4 வயது மகனின் உடலில் சூடு வைத்துள்ளனர்  இது குறித்து காவல்துறையினருக்கு தெரிவிப்பதாக அக்கம்பக்கதினர் கூறியதையடுத்து தம்பதியினர் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறை 4 வயதுடைய சிறுவன் மற்றும் இரண்டரை வயதுடைய சிறுமியை மீட்டு சிகிச்சையளித்து அனுப்பர்பாளையத்தில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனர் .

 மேலும் தலைமறைவான   சிறுவர்களின் பெற்றோர்களன மணோஜ்-பிஜிலு தம்பதியினரை போலிசார் தேடி வருகின்றனர் .

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...