கோவை மத்திய சிறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, டிசம்பர் 21

கோவை மாவட்ட மத்திய சிறையின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகச் சிறை கண்காணிப்பாளர் எம். செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், கோவை மத்திய சிறையில் பல்வேறு பிரிவில் காலிபணியிடங்கள் உள்ளன. உற்பத்தி பிரிவில் காலியாக உள்ள மின்கம்பியாளர் 2 காலிபணியிடங்களும், நெசவு பணியாளர் 1 காலிபணியிடமும், நெசவியல் வல்லுநர் 1 காலிபணியிடமும், தையல் போதகர் 2  காலிபணியிடங்கள் என மொத்தம் 6 காலிபணியிடங்கள் நிரப்பவதற்கு நேர்காணல் நடைபெறவுள்ளது. மின் கம்பியாளர் பணியிடத்திற்குப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள், இதர வகுப்பைச் சார்ந்தவர்களும், தையல் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் அருந்ததியினர், இதர வகுப்பைச் சேர்ந்தவர்களும், நெசவு பணியாளர், நெசவியல் வல்லுநர் பணியிடத்திற்கு அனைத்துப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். 

நெசவியல் வல்லுநர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக ஜனவரி 8-ம் தேதியன்றும், நெசவுப் பணியாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக ஜனவரி 9-ம் தேதியும், தையல் போதகர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக 11-ம் தேதியும், மின்கம்பியாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக 12-ம் தேதி என அனைத்து காலிப் பணியிடங்களுக்கும் அந்தந்த நாட்களில் காலை 11 மணியளவிலும் நேர்காணல் நடைபெறவுள்ளது. 

இந்த நேர்காணலில் கல்வித் தகுதி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், தொழிற்கல்வி சான்றிதழ், முன்அனுபவம் சான்றிதழ் மற்றும் முன்னுரிமைச் சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு மேற்கண்ட நாட்களில், கோவை மத்திய சிறைகண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெறும். இவ்வாறு கூறினார். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...